ரந்தோலி பெரஹெராவை பார்வையிடுவதற்காக ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
156

கண்டி எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெராவை காண பெருந்திரளான மக்கள் ரயிலில் கண்டிக்கு பயணிப்பதால் ரயில்களில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரஹெராவையொட்டி கண்டிக்கு சில விசேட ரயில்களை ரயில் திணைக்களம் சேவையில் ஈடுபடுத்திய போதிலும் ரயில்கள் அதிக பயணிகளின் நெரிசலுடனேயே பயணிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இதனால், இடைப்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் ரயில்களில் ஏற முடியாமல், சிலர் ரயிலின் மிதிப்பலகைகளை; மற்றும் மேற்கூரையில் ஏறி ஆபத்தான முறையில் பயணித்ததை அவதானிக்க முடிந்தது.

கண்டிக்கு ரயிலில் செல்வதற்கு பயணச்சீட்டுக்களை பெற ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது