பிரத்தியேக வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி ஒருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அஸ்கிரிய ரயில் நிலையத்துக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி பிரத்தியேக வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்த போதே ரயிலில் மோதுண்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.