28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரயில் பயணச்சீட்டில் தட்டுப்பாடு?

ரயில் பயணச்சீட்டு தட்டுப்பாடு காணப்படுவதால், அதனை விரைவில் தீர்க்குமாறு ரயில் நிலைய அதிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்த வாரத்திற்குள் அலவ்வ ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படும் என அதன் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

‘ரயில் டிக்கெட் தட்டுப்பாடு உள்ளது, அலவ்வ ரயில் நிலையத்தில் அடுத்த வாரத்திற்கு பிறகு டிக்கெட் விநியோகிக்க முடியாத நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ரயில் நிலைய அதிபர் தொடர்ந்து டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தும், அதற்கான டிக்கெட்டுகள் இதுவரை வழங்கப்படவில்லை. அச்சிடுவதில் காணப்படும் தாமதம் தான் இதற்கு காரணம். முன்பு, அரச அச்சகத்தின் ஊடாக எமக்கான டிக்கெட்டுகளை அச்சடித்தோம். இப்போது, ​​திணைக்களத்தின் ஊடாக மட்டுமே அச்சிட்டு வருகிறது. ஆனால், புதிய டிஜிட்டல் டிக்கெட்டுக்காக திணைக்கள உயர் அதிகாரிகள் காத்திருக்கின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வரும் அமைப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வந்துவிடும் என்று கனவு காண்கிறார்கள். இதில் பாதிக்கப்படுவது பயணிகளும், ஸ்டேஷன் மாஸ்டர்களும் தான். இவற்றுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles