ரஷ்யா மீது ஆளில்லா விமானம் தாக்குதல்

0
131

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவின் – மத்திய பகுதியில் உள்ள கட்டிடத்தை ஆளில்லா விமானம் தாக்கியதாக மொஸ்கோ நகர முதல்வர், தெரிவித்துள்ளார்.

அத்துடன், மொஸ்கோவின் மொசைஸ்க் மற்றும் கிம்கி பகுதிகளில் இரண்டு ஆளில்லா விமானங்கள் ஊடாக யுக்ரைன் பாதுகாப்பு படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த தாக்குதலால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் தொடர்பில், இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இதன்காரணமாக, இன்று அதிகாலை ரஷ்யாவின் விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் சகல விமானங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மொஸ்கோ நகர வளாகத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தை தாக்கிய ஆளில்லா விமானம் மின்னணு போர் முறைகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.

அது கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.