ரெம்டெஸிவர் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தடை

0
178

கில்லெட் நிறுவனத்தின் ரெம்டெஸிவர் கொரோனா தடுப்பு மருந்து கொரோனாவை போக்கும் ஆற்றல் கொண்டதாக நம்பப்பட்ட நிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனம் இந்த தடுப்பு மருந்துக்கு தடை விதித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்தை வழங்கக்கூடாது என கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம். நோயாளிகள் எந்த வயதைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படக்கூடாது எனக் கூறியது பலருக்கு ஏன் என்ற கேள்வியை எழுப்பியது. இதனால் தற்போது கில்லெட் நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ‛ரெம்டெசிவர் நோயாளிகளின் வைரஸ் தாக்கத்தை குறைக்கும் என்றோ, செயற்கை சுவாசம் அளிக்க தேவையில்லை என்றோ எந்தவித ஆதாரமும் இல்லை’ என தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளின் மரணத்தைத் தவிர்க்கும் தடுப்பு மருந்து என்ற பெயரை முன்னதாக இந்த தடுப்பு மருந்து பெற்று இருந்தது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் இது கொரோனாவைத் தடுக்கும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.