VPL UK என அழைக்கப்படும் கரப்பந்தாட்ட முதன்மை தொடரில் கோல்டன் ஈகிள்ஸ் அணி முதலாம் இடத்தினைப் பெற்று இவ்வருடத்திற்கான VPL UK கிண்ணத்தை தட்டிச்சென்றது.
இந்த கரப்பந்தாட்ட போட்டி லண்டன் சவுத்தோலில் உள்ள டோமெஸ் வெல்ஸ் பொழுதுபோக்கு மண்டபத்தில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
இக்கரப்பந்தாட்ட போட்டியானது 30 வருட பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களின் கரப்பந்தாட்ட வரலாற்றில் முதல்முறையாக புதிய அறிமுகமாக அறிமுகப்பட்டு, மிகவும் நேர்த்தியாக நடைபெற்று முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டி முற்றுமுழுதாக OverGame முறையில் 5 பேர் மற்றும் 4 பேர்கொண்ட கரப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ளது.
இதனடிப்படையில் ஸ்கார் லீமா, மருதம், யுனைட்டட் றைடர்ஸ்,கோல்டன் ஈகிள்ஸ், இசைத்தமிழ், இணைந்த கரங்கள், வொலிபோல் கிங்ஸ் தாய் மண், தமிழ்ப்பாலம், றோமியோ நவம்பர், யூகே தமிழ்ஸ் யுனைற்றட், லண்டன் ஃபயர் ஆகிய அணிகள் கரப்பந்தாட்ட போட்டியில் களமிறங்கியிருந்தன.இந்த கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தினை கோல்டன் ஈகிள்ஸ் அணியும், இரண்டாம் இடத்தினை றோமியோ நவம்பர் அணியும், மூன்றாம் இடத்தினை ஒஸ்கார் லீமா அணியும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தகது.