லாகூர் சந்தையில் குண்டுவெடிப்பு – குழந்தை உள்பட இருவர் பலி

0
165

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.
லாகூரில் உள்ள லஹோரி கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பலியான இருவரில் ஒரு குழந்தை அடங்கும். மேலும் காயமடைந்த 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பின் தாக்கத்தால் சாலையில் அரை மீட்டர் பள்ளம் ஏற்பட்டு அருகே உள்ள கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறின.
லாகூர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராணா ஆரிப், மோட்டார் பைக்கில் பொருத்தப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட குண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
லாகூர் துணை ஆணையர் உமர் ஷேர் சாத்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், அனார்கலி பஜாரில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பவத்திற்கு காரணமானவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.