அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் பில்லியனர் எலான் மஸ்க் ஆகியோர் பிரெஞ்சு தீவிர வலதுசாரித் தலைவர் மரின் லீ பென்னுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
அவர் நிதி மோசடி செய்ததாகக் கண்டறியப்பட்டு 2027 ஆம் ஆண்டு பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
ஐரோப்பிய பாராளுமன்ற நிதியை மோசடி செய்ததற்காக தேசிய பேரணியின் (RN) கட்சியின் தலைவர் மரின் லீ பென் மற்றும் கட்சியின் சுமார் இருபது செல்வாக்கு மிக்க உறுப்பினர்களை பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. நீதிமன்றம் வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனைகளை விதித்தது.
இதில் பகுதியளவு இடைநிறுத்தப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் லீ பென்னுக்கு ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.