லெபனானை விட்டு வெளியேறுமாறு, பிரிட்டன் தமது நாட்டுப் பிரஜைகளிடம் கோரிக்கை

0
75

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லெபனானில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகளை, அங்கிருந்து வெளியேறுமாறு பிரிட்டன் அறிவித்துள்ளது.

ஏவுகணை மற்றும் வான்வழிம் தாக்குதல்கள் தொடர்ச்சியாக லெபனானில் இடம்பெறுகின்றன. தற்போதுள்ள பதற்ற நிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போர் தீவிரமானால், தமது பிரஜைகளை உடனடியாக வெளியேற்றுவதில், சவால்களைச் சந்திக்க நேரிடும் என்பதால் பிரிட்டன் இவ்வாறான அறிவிப்பினை விடுத்துள்ளது.