அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்திலுள்ள வங்கிக் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
வாயு கசிவு காரணமாக குறித்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெடி விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்புப் படையினர் தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
அத்துடன் சம்பவத்தில் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தீப்பரவலால் வங்கிக் கட்டிடத்தின் முதல் தளம் முற்றிலும் சேதமடைந்ததாகக் கூறப்படுகின்றது.