வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று திடீரென அதிகரிப்பு!

0
269

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏழு பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் 155 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலையில் 06 பேருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், இரணைமடு விமானப்படை முகாமில் 04 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன் மூலம் வட மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.