வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான விஷேட கலந்துரையாடல், இன்று முற்பகல் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில், சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது, யாழ். பிராந்தியத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கை உரியவகையில் முன்னெடுத்து செல்லல், பொது மக்களின் நாளாந்த வாழ்வியல் செயற்பாடுகளின் போது, தேவையான பாதுகாப்பை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
யாழ். மாவட்டத்தில் மீள குடியேற்றப்பட்ட மக்களுக்காக, பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.