வடக்கு மாகாண சபை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

0
225

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட நிர்வாக அதிகாரிகள் சிலருக்கு இடமாற்ற உத்தரவு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் கீழ் உள்ள திணைக்களங்கள், அமைச்சுக்களில் பணியாற்றிய அதிகாரிகளிற்கே இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போதைய வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வடக்கு மாகாணக் கூட்டுறவு ஆணையாளராக பதவி வகித்த எஸ்.நந்தகோபாலன் கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளராகவும், கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக பதவி வகித்த திருமதி தேவநந்தினி பாபு கூட்டுறவு ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளராக பிரணவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இடமாற்றப்பட்ட 4 அதிகாரிகளின் இடமாற்றமும் எதிர்வரும் 24ஆம திகதி முதல் அமுலாகும் வகையில் செயல்படுத்தப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.