வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி – கப்பூது பகுதியில் பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து, வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பாதுகாப்பற்ற வயல் கிணற்றில் சடலமாக காணப்பட்டமை தொடர்பில் நெல்லியடி பொலிசருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேற்று மாலை சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன், பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
அப்பகுதியில் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுவதாகவும், அவற்றை காணி உரிமையாளர்கள் பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாப்பானதாக வைத்திருக்க வேண்டும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.