28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிவீதியில்பயணித்த பெண்ணின் தங்கச்சங்கிலி அறுப்பு!

அராலி பெண்ணின் சங்கிலி சித்தங்கேணியில் அறுப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி – குலனையூரை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணின் 5 பவுண் சங்கிலி சித்தங்கேணி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீதியில் வைத்து அறுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பெண் சித்தங்கேணியில் உள்ள உறவினரின் வீட்டு அந்தியேட்டி கிரியைகளில் கலந்துகொள்வதற்காக பேருந்துவில் சென்று, பேருந்துவில் இருந்து இறங்கி கிளை வீதியூடாக சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த பெண்ணின் சங்கிலியை அறுப்பதற்கு முயற்சித்தனர். உடனே அந்தப்பெண் சுதாரித்துக் கொண்டு அவர்களில் ஒருவர் மீது கையால் அறைந்தார்.

உடனே அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை கீழே தள்ளி விழுத்திவிட்டு சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles