வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மைத்திரி!

0
246

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப்போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப்போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க ஒருபோதும் விரும்பவில்லை. ஐந்தாறு மாவட்டங்களில் கட்சி மாநாடுகள் நடத்தப்படும்.
கடந்த காலக் குரல்கள் மீண்டும் ஒலிக்கும்’ என தெரிவித்துள்ளார்.