வனப்பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

0
154

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன், புளுகலை வனப்பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் விறகு சேகரிப்பதற்காக நேற்றைய தினம் அந்த வனப்பகுதிக்கு சென்றிருந்த நிலையில், காணாமல் போயிருந்தார்.
பின்னர், அவரது உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.