வரி செலுத்துவோர் தொடர்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு

0
80

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) கட்டாயமாக்குவது ஏப்ரல் வரை தாமதமாகும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஜனவரி 1ஆம் திகதிக்கு பின்னர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.

அதற்கமைய வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்திருந்தது.

பின்னர் பெப்ரவரி மாத இறுதிக்குள் அடையாள எண் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடுத்த மாத இறுதிக்குள் இலக்கங்களை வழங்கி முடிக்க முடியாததால் இந்த திட்டம் ஏப்ரல் மாதம் வரை தாமதமாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.