அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரிகள் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வன் டெர் லெயன் தெரிவித்துள்ளார்.
சீனா டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நோக்கத்துடனும் உறுதியாகவும் செயற்படவேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னே தெரிவித்துள்ளார்.
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி டிரம்பின் வரி தவறான விடயம் என தெரிவித்துள்ளதுடன் இதனால் வர்த்தக போர் உருவாகலாம் என தெரிவித்துள்ளார்.
இது நண்பர் ஒருவரின் செயல் இல்லை என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தக போர் யதார்த்தாமாகிவிட்டது என தென்கொரிய பதில் ஜனாதிபதி ஹன் -டக் – சூ தெரிவித்துள்ளார்-