வலுவாகும் ‘மொக்கா’ சூறாவளி: பங்களாதேஷ், மியன்மாரின் கரையோரப் பகுதிகளில் பாதிப்பு

0
155

‘மொக்கா’ எனப் பெயரிடப்பட்ட சூறாவளியின் வலு மேலும் அதிகரித்த நிலையில் பங்களாதேஷ் மற்றும் மியன்மாரின் கரையோரப் பகுதிகளைத் தாக்கியுள்ளது.

இதனையடுத்து அங்கு கடும் மழையுடனான வானிலை நிலவுவதுடன் மணித்தியாலத்திற்கு 120 மைல் வேகத்தில் கடும் காற்று வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள சூறாவளி காரணமாக கரையோரப் பிரதேசங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் சுமார் 4 மீற்றருக்கும், அதிகமான உயரத்தில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூறாவளி, உலகிலேயே பெரிய ஏதிலிகளைக் கொண்டுள்ள முகாமான கொக்சிள பசாரினை தாக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஏதிலிகள் முகாமில் தற்போது 10 இலட்சம் ஏதிலிகள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 20 வருடங்களுக்குப் பின்னர் பங்களாதேஷில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 5 இலட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், ஏராளமான வீடுகள் பகுதியளவில் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

கடும் மழை மற்றும் வெள்ளம் மேலும் அதிகரித்து வரும் நிலையில், பாரிய மண்சரிவுகள் இடம்பெறலாம் என பங்களாதேஷ் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.