வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை நிரப்பும் போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது வவுனியா ஹெரவப்பத்தான பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே பதிவாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் உடனடியாக செயற்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் பாரிய அனர்த்ம் தவிர்க்கப்பட்டுள்ளது.