வவுனியாவில் யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழப்பு!

0
445

வவுனியா – சேமமடு கிராமத்தில் யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேமமடு பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டில் தேன் எடுப்பதற்காக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியின் குறுக்கே நின்ற யானை அவரை தாக்கியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் அதனை அவதானித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.