வவுனியாவில் விபத்து: பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு!

0
139

வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி விளக்குவைத்தகுளத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து வவுனியா நோக்கி வந்த கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவிலிருந்து புளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

விபத்தில் கண்டியைச் சேர்ந்தவரும் புளியங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிளுமான 55 வயதான கருணாதிலக்க என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.