வவுனியாவைச் சேர்ந்த குடும்பம் இராமேஸ்வரத்தில் தஞ்சம்!

0
30

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் கடல் வழியாகத் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கையர்கள் நால்வர் இராமேஸ்வரத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கணவன் , மனைவி மற்றும் இரு பிள்ளைகளே இவ்வாறு இராமேஸ்வரத்தைச் சென்றடைந்துள்ளனர்.

குறித்த நால்வரையும் இந்தியக் கடலோர காவல்படை மீட்டு இராமேஸ்வரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனை அருகே படகொன்றில் இவர்கள் தரையிறங்கியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.