வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து கைதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், நேற்றையதினம் இரவு சிறைக்கூடத்திற்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயற்சித்த கைதி, சிறைக்காவலர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.