வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய இசையுடன் நுங்கு திருவிழா நேற்று இடம்பெற்றது.
இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் கலை நிலா கலையகத்தினால் இயற்கை உரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடக ஆற்றுககையும் இடம்பெற்றது.சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் கிராம சேவகர்கள் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.