பொதுத் தேர்தலின் போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாக்காளருக்கு இடதுகை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையிலுள்ள வேறேதேனுமொரு விரலில் உரிய அடையாளமிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பின் போது வாக்காளரின் இடது கை சுண்டு விரலில் உரிய அடையாளமிடப்பட்டது.
இந்நிலையில் 1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38 ஆம் பிரிவின் பிரகாரம், வாக்களிப்பின்போது வாக்களிப்பதை அடையாளப்படுத்துவதில் எழும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.