மெக்சிகோ நாட்டின் வடகிழக்கே உள்ள ஊர்ப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் பின்புறத்தில் 2 அங்குல நீளத்தில் வால் ஒன்று காணப்பட்டுள்ளது. உருளை வடிவில் காணப்பட்ட அந்த வாலானது தோல் மற்றும் முடி கொண்டு மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதன்பின்னர் அதனை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர். இதன்பின்பு குழந்தை நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ உலகில் நிகழ்ந்த அதிசயமாக இது பார்க்கப்படுகிறது.