போதைப்பொருள் தொடர்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் 40 பேர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேல் மற்றும் தென் மாகாணங்களை மையப்படுத்தி நேற்று 815 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.