விடுதி அறையிலிருந்து இளம் யுவதி சடலமாக மீட்பு!

0
84

அவிசாவளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள, விடுதியொன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த விடுதியில் நேற்று மாலை தங்கியிருந்த யுவதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில், உயிரிழந்துள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக அவிசாவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில், காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.