நாடு 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது. இத்தாலிய விண்வெளி வீராங்கணை சமந்தா கிறிஸ்டஃப்ரோட்டி விண்வெளியில் இருந்து ஒரு வாழ்த்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இத்தாலிய விண்வெளி முகமை (ஐஎஸ்ஏ), அமெரிக்க விண்வெளி மையம் நாசா இன்னும் பல சர்வதேச கூட்டாளிகள் சார்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுக்கு வாழ்த்து கூறுகிறேன். சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வாழ்துகளைப் பகிர்கிறேன்.
பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவும் இஸ்ரோவுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு இஸ்ரோ ஆயத்தமாகும் சூழலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.