விபத்துக்குள்ளான K-8 குறித்து ஆய்வு

0
20

விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சீனாவில் தயாரிக்கப்பட்ட K-8 பயிற்சி ஜெட் விமானம் நிலையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என  பதில் பாதுகாப்பு அமைச்சர்  அருண ஜெயசேகர  தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து ஏழு பேர் கொண்ட குழு விசாரித்து வருவதாக  கூறியுள்ள அமைச்சர்  அருண ஜெயசேகர, தேவைப்பட்டால், வெளிநாட்டு ஆய்வுக் குழுக்கள் வரவழைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாரியபொலவின் மினுவங்கேட் பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (21)  அன்று இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K-8 வகை ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த இரண்டு விமானப்படை வீரர்கள் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.