வியட்நாமில் யாகி புயல்காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 143ஆக உயர்வு

0
72

வியட்நாமில் யாகிப் புயலின் தாக்கம் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 143ஆ உயர்வடைந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய ‘யாகி’ புயல் கடந்த சனிக்கிழமையன்று வியட்நாமை தாக்கியது.

வியட்நாமின் வடக்கு கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 149 கிலோ மீற்றர் வேகத்துடன் புயல் கரை கடந்தது.
இதன் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் காரணமாக கடலோர மாகாண பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
புதோ மாகாணத்தில் பாலம்இடிந்து விழுந்ததில், 10 கார்கள் உட்பட பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
யாகி புயல் மற்றும் அதற்கு பின் ஏற்பட்ட வெள்ளம்,நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 143 ஆகியுள்ளது.
புயல், கனமழை காரணமாக 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.