உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி தொழில்முறை ரென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் 25 வயதேயான விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அவுஸ்திரேலியரான ஆஷ்லே பார்டி இன்று சமூகவலைத்தளத்தின் தனது அறிவிப்பை வெளியிட்டார்.
தனது பதிவில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும் ஒரு நபராக எனக்கு இது சரியானது என்று என் இதயத்தில் இப்போது எனக்கு தெரியும்”, என்று கூறியுள்ளார்.

ஆஷ்லே பார்டி 2019ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது அவரின் முதல் கிராண்ட்ஸ்லம் படமாக அமைந்தது. கடந்த ஆண்டு விம்பிள்டன், கடந்த ஜனவரியில் அவுஸ்திரேலிய ஓப்பன் என கிராண்ட்ஸ்லம் பட்டங்களை வென்றார்.
44 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமைக்குரியவராக ஆஷ்லே திகழ்ந்தார். அவுஸ்திரேலியாவில் ரென்னிஸ் விளையாடும் சிறுவர்களின் எண்ணிக்கை 30வீதமாக அதிகரித்ததில் ஆஷ்லேயின் பங்களிப்பும் மகத்தானது என்று கூறப்படுகின்றது.

ஆஷ்லே 2014ஆம் ஆண்டும் ரென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார். சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாகவும் வலம் வந்த அவர் பிக்பாஷ் லீக் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். 2018இலேயே ஆஷ்லே மீண்டும் ரென்னிஸ் விளையாட வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.