விளையாட்டு வினையானது – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

0
36

தான் பணிபுரியும் பொலிஸ் நிலையத்தில் உள்ள அதிகாரியை தொலைபேசியில் மிரட்டியதற்காக தலங்கம பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவில் பணிபுரியும் புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில் தொலைபேசி பிரிவில் பணிபுரிந்து வந்த தனது நண்பரை அச்சுறுத்துவதற்காக அவர் இதைச் செய்திருப்பது தெரியவந்தது.வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தலவதுகொட – ஷாந்திபுரவில் வசிக்கும் ஒரு தொழிலதிபரிடம் கப்பம் கோரி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதன்படி மிரிஹான வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு அருகே பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 10 ஆம் திகதி இரவு 10.55 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவர் தலங்கம பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்துஇ ‘ழுஐஊ இருக்கிறாரா?’ என்று கேட்டுள்ளார்.

தொலைபேசி பிரிவில் பணியில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், ‘ஐயாஇ இந்த நேரத்தில் OIC நிலையத்தில் இல்லை’ என்று பதிலளித்தார். அந்த நேரத்தில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட அடையாளம் தெரியாத நபர் ‘இன்று உங்கள் தலவதுகொட நபர் சுட்டுக் கொல்லப்படுவார் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.

பின்னர் தொலைபேசியில் பதில் வழங்கிய பொலிஸ் அதிகாரி இந்த விடயம் குறித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் அளித்து தலவதுகொட தொழிலதிபரின் வீட்டின் பாதுகாப்பு குறித்து மேலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்த மிரட்டல் அழைப்பு குறித்து கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸாரின் தொலைபேசி எண் தொடர்பான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

தலங்கம பொலிஸ் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரியும் பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் தொடர்புடைய தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.விசாரணையில் தொலைபேசி பிரிவில் பணிபுரியும் அதிகாரியும் அழைப்பைச் செய்த கான்ஸ்டபிளும் நண்பர்கள் என்பதும் அவர்கள் இருவரும் ஒரே படைமுகாமில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. அழைப்பை மேற்கொண்ட சந்தேக நபர் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து தொலைபேசி பிரிவில் பணிபுரியும் தனது நண்பரை மிரட்டுவதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இரண்டு கான்ஸ்டபிள்களும் இது குறித்து பொறுப்பதிகாரிக்கு ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி விசாரணையின் போது ​​24 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் மேலும் அவர் பயன்படுத்திய சிம் அட்டையுடன் கூடிய கையடக்க தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.