வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, அரசியலமைப்பின் 34வது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதன் அடிப்படையில், நாடாளாவிய ரீதியில் இன்று 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.