வவுனியா வெடுக்குநாறிமலையில், ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக, நெடுங்கேணி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து, ஆலய நிர்வாகத்தினர், இன்று விடுவிக்கப்பட்டனர்.
குறித்த வழக்கு, இன்று, வவுனியா நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு, போதிய சான்றுகள் இன்மையால், வழக்கில் இருந்து, ஆலயப் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர் இன்று விடுவிக்கப்பட்டனர்.
வழக்கில், ஆலய நிர்வாகம் சார்பாக, சிரேஸ்ட சட்டத்தரணி திரு. அருள் முன்னிலையானர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆலயத்தில் மரத்திலான ஏணிப்படி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அதனை சீரமைத்து ஏணிப்படி ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பாக வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த ஏணிப்படியை சீரமைத்தமைக்கான சான்றுகள் இல்லை என அரச சட்டவாதிகளால் இன்றையதினம் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த மூன்று பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர் என்றார்.