மெக்ஸிகோ நாட்டில் கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்கி மெக்ஸிகோவின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மெக்ஸிகோவில் கருக்கலைப்பு செய்வது ஒரு தண்டணைக்குரிய குற்றமாக இருந்து வந்துள்ளது, இந்த நிலையில் குறித்த சட்டமானது இரத்து செய்யப்பட்டிருந்தது.இருப்பினும், கருக்கலைப்பு செய்து கொள்ள நிலைக்கும் கா்ப்பிணிகளுக்கும், அவா்களுக்கு கருக்கலைப்பினை செய்துவைக்கும் மருத்துவப் பணியாளா்களுக்கும் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வந்தது
இந்நிலையில், கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து தண்டனைகளையும் மெக்ஸிகோவின் உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்து தீர்ப்பளித்திருந்தது.
கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்த பல்வேறு மாகாணங்களும் இந்த உத்தரவினை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக கருக்கலைப்பை இரத்து செய்து உத்தரவிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.