IDMNC சர்வதேச கல்வி நிறுவனம் மற்றும் ஜனனம் அறக்கட்டளை இணைந்து இன்றைய தினம் ஏற்பாடு செய்த கடற்கரை சுத்தப்படுத்தல் பணி கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இப் இப்பணியில் IDMNC சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் குறித்த சுத்திகரிப்பு பணியில் கலந்து கொண்டார்.
அத்தோடு கல்வி நிறுவனத்தின் ஊழியர்களும் மாணவர்களும், சுற்றுச் சூழல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து சுத்திகரிப்பு பணியில் கலந்துகொண்டனர்