ஆப்பிரிக்க கண்டத்தில் வேகமாக பரவிவரும் குரங்கம்மை நேர்யானது, பாகிஸ்தானிலும் கண்டறியப்பட்டுள்ளது.
குரங்கம்மையர்ல் பாதிக்கப்பட்ட நபரொருவர் பாகிஸ்தானில் அடையாளம் காணப்பட்டுள்ளார். 34 வயதுடைய நபர் ஒருவரே குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குரங்கம்மை நோய்த்தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வைரஸின் புதிய வகை திரிபு மக்கள் மத்தியில் வேகமாக பரவும் என கூறப்படுகிறது.
நேற்றைய தினம் ஸ்வீடனில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டுள்ளதுடன் ஆபிரிக்க கண்டத்திற்கு வெளியே முதன்முறையாக குரங்கம்மை நோய் பதிவாகியிருந்தது. இந்த வைரஸால் ஆபிரிக்க கண்டத்தில் 450 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.