வேலன் சுவாமியின் கைதை கண்டிக்கும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

0
166

சிவில் உரிமை செயற்பாட்டாளரும், இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் மற்றொரு முயற்சி என பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சேர் எட் டேவி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துபொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சேர் எட் டேவி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமை மிகவும் கவலையளிக்கின்றது.தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் மற்றொரு முயற்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிவில் சமூகத்தின் இந்த துன்புறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வெளிவிவகாரச் செயலாளரிடம் தனது இலங்கை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துமாறு நான் கேட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.