வைத்தியர் அர்ச்சுனா சார்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு!

0
81

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா சார்பில் பிணை கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

நகர்த்தல் பத்திரத்தை நிராகரித்த மன்னார் நீதவான், ஏற்கனவே உத்தரவிட்டவாறு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் வைத்தியசாலைக்குள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து, பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன், வைத்தியரின் அறைக்கு சென்று, அனுமதி இன்றி புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில், மன்னார் பொலிஸில், வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

அதற்கமைய, கடந்த சனிக்கிழமை, மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அர்ச்சுனா, மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று, சட்டத்தரணிகள் ஊடாக பிணை கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.