ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் ஆரம்பமாகியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உஸ்பெஸ்கிஸ்தானைச் சென்றடைந்தார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற உள்ளது. உக்ரைனில் ரஷியா தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கிய பின்னர், மோடியும் மற்றும் புடினும் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள், ஆசிய பசிபிக் பிராந்திய நிலவரம்,
ஐ.நா.சபை மற்றும் ஜி 20 நாடுகள் அமைப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.