ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள மன்ரேசா ரயில் நிலையத்தை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று, ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 155 பயணிகள் காயமடைந்துள்ளனர். சற்றும் எதிர்பாராதவிதமாக ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலுடன், இந்த ரயில் மோதியதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 155 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.