ஹஜ் பெருநாள் முஸ்லிம் மக்களின் உன்னத பெருநாள் – சஜித் பிரேமதாச வாழ்த்து

0
67

ஈதுல் அல்ஹா பெருநாள் சமூக நல்லிணக்கத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கியமானதும் தனித்துவமானதுமான தியாகத் திருநாளாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் ஹஜ் யாத்திரை இறைவன் மீதான பக்தி மற்றும் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகும்.

அந்த நம்பிக்கையின் காரணமாக, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே நோக்கத்துடன் ஒரே நேரத்தில் புனித மக்காவில் ஒன்று கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சகோதரத்துவ கூட்டு மதிப்பைப் போற்றுகிறார்கள்.

மதத்தின் மூலம், மனித சமுதாயம், மனித நேயத்தால் முழுமையடைந்து நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மதத்திலும் கலாசாரத்திலும் நடக்கும் இத்தகைய கொண்டாட்டங்கள் மூலம் அந்த நல்ல நோக்கம் நினைவுகூறப்படுகின்றது.

எனவே, பல்வேறு பேதங்கள் மூலம் மனித இனத்திற்கிடையே மோதல்களை உருவாக்குவதற்குப் பதிலாக, பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவர்களாகவும் சகோதர வாஞ்சையுடன் நேசிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இது நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டு நமது நாட்டை உலகில் முதலாவது இடத்துக்கு கொண்டு செல்லும் பயணத்திற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். அ

தற்காக அனைவரும் ஒரே புரிந்துணர்வுடன் ஈதுல் அல்ஹா பெருநாளை சகோதரத்துவத்துடன் கொண்டாடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.