ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் யுலிப்பில்ட் தோட்ட, எரோல் பிரிவில் வீட்டு மலசலகூடத்தில் இருந்து, சிறுத்தை குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களேயான சிறுத்தைக்குட்டியை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர்.
இதேவேளை ஹெரோல் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் அத்தோட்டத்தில் உள்ள நாய்களும் சிறுத்தைகளால் வேட்டையாடப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.