இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் மாதுரு ஓயா பயிற்சிப் பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட விமான விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் நலனை விசாரிப்பதற்காகஇ இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்தார்.
இதன்போது, காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு தேவையான மேலதிக சிகிச்சைகள் குறித்து வைத்தியசாலை அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.