06 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

0
160

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை கடந்த சனிக்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும் நேற்றுக் காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை அவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று காலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் இந்திய மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.