100 நாட்களின் பின்னர் ஜனாதிபதி செயலக பணிகள் இன்று ஆரம்பம்!

0
169

ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த செயலகத்தின் பணிகள் 100 நாட்களின் பின்னர் இவ்வாறு மீள முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி செயலக பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.