108 கிலோ 460 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடா பகுதியில் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மல்லாவி ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 35 மற்றும் 41 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.